tamilnadu

img

வங்கிகள் இணைப்பால் ஒருவர் கூட வேலையிழக்க மாட்டாராம்

மத்திய நிதியமைச்சர் சொல்கிறார்

சென்னை, செப்.1- பொதுத்துறை வங்கிகள் இணைப் பால் 7 ஆயிரம் வங்கிக்கிளைகள் மூடப் படும் அபாயம் உள்ளது என்று வங்கி ஊழியர் சங்க தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்படு வதால் ஒரு ஊழியர் கூட வேலை யிழக்க மாட்டார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரி வித்துள்ளார்.   சென்னையில் நடைபெற்ற செய்தி யாளர்கள் சந்திப்பில், மத்திய  நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமனிடம்  பொருளாதார மந்த நிலை குறித்து கேள்வி எழுப்புகையில்,  அனைத்து துறைகளை சேர்ந்த தொழில் நிறு வனங்களுடன் அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும்  அவர்களுக்கு என்ன தேவை, அரசு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள் போன்ற கருத்துகளை கேட்டறிந்து, அதற்கு ஏற்ப செயல்படுவதாகவும் கூறினார். 

செய்தியாளருடன் வாக்குவாதம்
 

ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறைவு, வேலையிழப்பு போன்ற காரணங்க ளால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதை மத்திய அரசு ஒப்புக் கொள்கிறதா என்று கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் நிர்மலா சீதாராமன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாகன உற்பத்திக்கான ஜிஎஸ்டி வரியை குறைப்பது தனது கைகளில் இல்லை என்று குறிப்பிட்ட அவர், அது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடி வெடுக்க முடியும் . பொருளாதார பின்ன டைவால் வாகன உற்பத்தித் துறை யில் தேக்கம் ஏற்பட்டு, மூன்றரை லட்சம் பேர் வேலை இழந்திருப்பதாக கூறப் பட்டதற்கு எந்தவித புள்ளி விவரமும் இல்லை என்று கூறி சமாளித்தார்.   10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 4 வங்கிகளாக மாற்றப்படுவது தொடர்பாக விளக்கம் அளிக்கையில், வங்கிகள் இணைப் பால் ஒருவருக்கு கூட வேலை இழப்பு இருக்காது. தேசியமயமாக்கப்பட்ட வங்கி களுக்கு அதிக மூலதனம் தரப்படுவ தால், வங்கிகள் மூடப்படும் என்பது தவ றான தகவல் என்று கூறினார்.